பெங்களூரில் மே 18, 19-இல் கல்விக் கண்காட்சி
பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.
பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து கண்காட்சியின் அமைப்பாளர் தீபக்பூனம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் பியூசி படித்த மாணவர்கள் மேற்கொண்டு படிப்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
மே 18-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கல்வி கண்காட்சியை புட்டண்ணம்மா, எஸ்.நஞ்சப்பா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். முக்கிய விருந்தனர்களாக சட்டமேலவை உறுப்பினர் எம்.ஆர்.துரைசாமி, முன்னாள் அமைச்சர் புட்டேசாமி, கல்வித் துறை முதன்மைச் செயலர் ஜே.குமாரநாயக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
Advertisement
19-ஆம் தேதி மாலை 5 மணியளவில் கண்காட்சியில் ஆதிசுன்சுனகிரி மடாதிபதி நிர்மாலனந்த சுவாமிகள், மூத்த பத்திரிகையாளர் எஸ்.ஆர்.ஆராத்தியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றார் அவர்.