முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் மே 18, 19-இல் கல்விக் கண்காட்சி

பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

Updated On : 11 மே, 2013 at 12:39 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கண்காட்சியின் அமைப்பாளர் தீபக்பூனம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் பியூசி படித்த மாணவர்கள் மேற்கொண்டு படிப்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.

மே 18-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கல்வி கண்காட்சியை புட்டண்ணம்மா, எஸ்.நஞ்சப்பா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். முக்கிய விருந்தனர்களாக சட்டமேலவை உறுப்பினர் எம்.ஆர்.துரைசாமி, முன்னாள் அமைச்சர் புட்டேசாமி, கல்வித் துறை முதன்மைச் செயலர் ஜே.குமாரநாயக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

19-ஆம் தேதி மாலை 5 மணியளவில் கண்காட்சியில் ஆதிசுன்சுனகிரி மடாதிபதி நிர்மாலனந்த சுவாமிகள், மூத்த பத்திரிகையாளர் எஸ்.ஆர்.ஆராத்தியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.