எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் என்எஸ்எஸ் திட்ட நாள் விழா
திருவண்ணாமலை, செப். 26: திருவண்ணாமலை, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். செயலர் ஆர்.குப்புசாமி விழாவைத் தொட
திருவண்ணாமலை, செப். 26: திருவண்ணாமலை, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். செயலர் ஆர்.குப்புசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ரூபன் ஜெபானந்தன், சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் ப.இந்திரராஜன் ஆகியோர் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பேசினர். இவ் விழாவில், கல்லூரி முதல்வர் எஸ்.பாலசுப்ரமணியன், கல்வி இயக்குநர் சி.குமார், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ப.விநாயகம், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.