முகப்பு
கல்வி

பிளஸ் 2: மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம்!

மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம்..

பிளஸ் 2 - DPS
பகிர்:

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பொதுத்தோ்வு முடிவுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய ஆட்சி பொறுப்பேற்காததால் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி. சந்தரமோகன் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில் 7.53 லட்சம் (95.2%) மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 8,855 மாற்றுத்திறனாளிகள் மாணவர்களில் 6,811 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 76.92 தேர்ச்சி சதவீதம் ஆகும்

​தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 250 அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 238 பேர் 95.20 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் 24.18% பேரும், முதலாம் ஆண்டு தனித்தேர்வர்கள் 41.53% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டு வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சியும் அதிகரித்துள்ளது.

summary

With the results of the Plus 2 public examinations in Tamil Nadu released this morning, the pass details for differently-abled students and prison inmates have been published.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments