தமிழில் உயர்கல்வி: சிக்கல்களும் தீர்வும்! 4-வது செயல்திட்டம்!
தமிழில் உயர்கல்வியை கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்களும் தீர்வும் பற்றிய நான்காவது செயல்திட்டம்
எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அவற்றில், ஆண்டுதோறும் பல்வேறு புதிய புதிய பொறியியல் படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டு லட்சக்கணக்கானோர் தொழில்கல்வியில் பட்டம் பெற்று வருகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகம் பொருள் செலவிட்டு தொழிற்கல்வி படித்தாலும்கூட வளாகத் தேர்வின்போது, போதிய திறன் இல்லாததால், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதில் மாணவர்கள் பலரும் பின்தங்கி விடுகிறார்கள்.
மாணவர்களின் திறனை வளர்க்க, தொழில்படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம், மொழி ஒரு தடையாக இருக்கவே கூடாது, ஆங்கிலத்தில் கற்பித்தால்தான் வளாக நேர்காணல்களின்போது பிரகாசிக்க முடியும் என்ற கூற்றும் எழுகிறது.
தமிழ் மொழியில் கல்வி என்பதில் உள்ள சிக்கல்களுக்கு நான்காவது செயல்திட்டமாக இருப்பது பற்றி..
செயல்திட்டம் 4: குறிப்பிட்ட பதங்களைஅப்படியே பயன்படுத்தல் அவசியம். மொழிபெயர்ப்பு என்பதே இல்லாமல், அறிவின் வளர்ச்சிக்கேற்ப, துறைகள் மேம்படும்போதும், அந்தந்த மொழியிலேயே புதிய சொற்கள் உருவாகும்போதும்கூட, இப்படிப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகத் தேவை.
சொல்லப்போனால், வளமான தமிழ்மொழியில், உயர்கல்வியைப் பயிற்றுவிப்பது என்பது கடினமானது அன்று. பழந்தமிழ் இலக்கியங்களிலேயே சொற்கள் மட்டுமல்ல, அறிவியல் மேம்பாடுகளுக்கு நிகரான தகவல்களும் உள்ளன. துறை வல்லுநர்களும் மொழி வல்லுநர்களும் இணைந்து செயல்பட்டால், விளைவு வெகு அலாதியாக இருக்கும்.
இதெல்லாம் கிடக்கட்டும். பல்வேறு படிப்புகளுக்கான தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டியிருக்கிறதே, பின்னர் ஏன், இந்தமெனக்கெடல் என்று கேட்பவர்களுக்கு சில செய்திகள்:
தாய்மொழியில் கற்பதும் சிந்திப்பதும் அறிவையும் அணுகுமுறையையும் விசாலப்படுத்தும். படைப்பாற்றலை விரிவாக்கும். எந்தத் துறையானாலும், எந்த சாத்திரமானாலும், அது நம்முடைய தமிழ் மொழியில்இருக்கவேண்டும்; அது குறித்ததகவல்கள் இருக்கவேண்டும்.
இன்றைக்குமட்டுமல்ல, என்றைக்காக இருந்தாலும், தமிழில் பயில வேண்டும் என்று விரும்புகிற எதிர்காலச் சிறுவனுக்கும்சிறுமிக்கும் உதவுகிற வகையில், இன்றே இப்பணிகளைச் செய்து, அவர்களுக்கான சொத்தைச் சேகரித்து வைக்க வேண்டியது நமது பொறுப்பு.
எந்த மொழியில் தேர்வெழுதினாலும், படித்துப் புரிந்துகொள்வதற்கும், தெளிவாகச் சிந்திப்பதற்கும் தாய்மொழியிலேயே கற்பதற்கான வாய்ப்புகள் அவசியம். நன்றாகப் புரிந்து உள்வாங்கிக் கொண்டதை, இன்னொருமொழியில்வெளிப்படுத்தி எழுதுவதோ கூறுவதோ சாத்தியம். மொத்தத்தில், தமிழில் முடியும்; தமிழால் முடியும்.