பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள்! களையெடுக்க அண்ணா பல்கலை. புதிய முயற்சி
பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களைக் களையெடுக்க அண்ணா பல்கலை. புதிய முயற்சி
பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டுக்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில், போலி பேராசிரியர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பேராசிரியர்களின் புவிக்குறியிடப்பட்ட புகைப்படங்கள், விடியோ பதிவுகள் போன்றவை, பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்யும்போது பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முகத்தை அடையாளம் கண்டு உறுதி செய்யும் அமைப்பையும் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது.
Advertisement
Advertisement
2026 -2027ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கோரி தமிழகத்தில் 463 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.