முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

நீட் மறுதேர்வு எப்போது? - என்டிஏ இயக்குநர்

நீட் மறுதேர்வு எப்போது நடத்தப்படும் என்று என்டிஏ இயக்குநர் தெரிவித்தது குறித்து...

தேசிய தேர்வு முகமை இயக்குநர் அபிஷேக் சிங் - ANI
பகிர்:

நீட் மறுதேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணை சில நாள்களில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்தன.

அதாவது, நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.

Advertisement

இந்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை இன்று (மே 12) அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அபிஷேக் சிங் தெரிவித்ததாவது:

“நீட் மறுதேர்வு குறித்து எங்களுடைய குழுவுடன் கலந்தாலோசிக்க உள்ளேன். சில நாள்களில் மறுதேர்வுக்கான தேதி மற்றும் முழு அட்டவணை வெளியிடப்படும். மருத்துவ கல்லூரிக்கான கல்வி ஆண்டு அட்டவணை மற்றும் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணைக்கு இடையூறு ஏற்படாத வகையில், தேர்வை முடிந்தவரை குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிடுவோம். அடுத்த ஏழு முதல் பத்து நாள்களுக்குள் இதற்கான செயல்முறைகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

summary

Abhishek Singh, Director of the National Testing Agency (NTA), stated on that the date and schedule for the NEET re-examination will be released within a few days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.