செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை பற்றி...
கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.
கரூரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
Advertisement
இந்த நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி எந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.