தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை!
தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
Advertisement
அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். பிற்பகலுக்குப் பிறகு தொகுதிகளின் வெற்றி நிலவரம் ஒவ்கொன்றாக தெரிய வந்துவிடும்.
தேர்தலில் பெறும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் அடுத்த என்ன செய்யலாம் என்கிற முக்கிய ஆலோசனையில் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த ஆலோசனையில் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.