முகப்பு
தமிழ்நாடு

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!

இன்று பிற்பகல் தமிழக ஆளுநரைச் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்....

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை இன்று பிற்பகல் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 3.30 மணிக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார்.

பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெருங்கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி விஜய் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓரிரு வாரங்கள் அவகாசம் கோருவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

TVK Leader vijay meets tn governor today noon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments