முகப்பு
தமிழ்நாடு

தவெகவுக்கு ஆதரவா? 24 மணிநேரத்தில் முடிவு! - சிபிஎம் எம்.ஏ. பேபி

தவெகவுக்கு ஆதரவு குறித்து சிபிஎம் பொதுச் செயலர் பேபி விளக்கம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி - கோப்புப்படம்
பகிர்:

தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது குறித்து 24 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5) நேற்று ஆதரவு அளித்தது.

மேலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்களின் ஆதரவைக் கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்த எம்.ஏ. பேபி தெரிவித்திருப்பதாவது:

”தவெக தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்யை தமிழ்நாடு ஆளுநர் அழைக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக மரபுகளை ஆளுநர் பின்பற்ற வேண்டும்.

எங்கள் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றது. கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்துகளை எட்டும் நோக்கில் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சற்று முன்னதாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடிக்க இந்த மூன்று கட்சிகளின் செயற்குழுக் கூட்டமும் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Support for TVK? Decision in 24 Hours! — CPM's M.A. Baby

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments