கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவிக்கிறார் விஜய்!
ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் 233 பேர் போட்டியிட்ட நிலையில் 107 பேர் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். விஜய் ஆட்சியமைக்க 118 பெரும்பான்மை தேவைப்படும் நிலையில் காங்கிரஸ்(5), சிபிஐ(2), சிபிஎம்(2) ஆதரவு அளித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கியதன் மூலம் தவெகவின் பலம் 116 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் எம்எல்ஏக்கள் 9 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் 2 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவு கடிதத்தை தவெகவின் நிர்மல்குமார் நேரில் பெற்றுக்கொண்டார்.
Advertisement
Advertisement
மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளித்து தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் விஜய் சென்று நன்றி தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
It has been reported that TVK leader Vijay will personally visit the communist parties for their support and express his gratitude.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.