ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதவ் அர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆதவ் அர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு கட்சிகள் என 116 உறுப்பினர்களுடன் தவெக கடந்த ஒரு சில நாள்களாக ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை என்ற 118 பலத்தைப் பெறப் போராடி வந்தது.
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் இன்று மாலை 4 மணியளவில் தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுக் கடிதத்துடன் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார். ஜனநாயகம் காக்கப்படும், மக்களுடைய ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேப்பார் என்று அவர் கூறினார்.
திருமாளவனுக்கு நன்றி தெரிவித்தன் மூலம் அரவது கட்சியின் ஆதரவை உறுதி செய்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.