ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்!
ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி..
விவசாயிகளை இழிவுபடுத்திப் பேசிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், குறுவை சாகுபடி மேற்கொள்ளாத அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயத்தை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
விவசாயிகளின் போராட்டம் காரணமாக ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.