பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை!
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் முதல்வராக பதவியேற்ற நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார். முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்வர் விஜய்க்கு பெரியார் சிலையை பரிசளித்தார் கி.வீரமணி.
Advertisement
தமிழ்நாட்டின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்து வைத்தார். பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அவர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் செய்துவைத்தார்.
The Chief Minister paid tribute at the Periyar Memorial in Vepery, Chennai.