முகப்பு
செய்திகள்

மாற்றம் யாரிடமிருந்து தொடங்க வேண்டும்? வாக்களித்த பிறகு இயக்குநர் அமீர் கேள்வி

சென்னையில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் அமீர் வாக்கு செலுத்தினர்.

Updated On : 23 ஏப்ரல் 2026, 11:15 am IST
வாக்களித்த விஜய் சேதுபதி, அமீர் - எக்ஸ்
பகிர்:

மாற்றம் யாரில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என நடிகர் அமீர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.

Advertisement

Advertisement

அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். பின்னர் பேசிய அவர்,

''தயவு செய்து அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும். இது நமதுஜனநாயகக் கடமை'' எனக் கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் அமீரும் சென்னையில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுடன் பேசியதாவது:

''அமீமானத்தின் அடிப்படையில் நாம் வாக்களிக்கக் கூடாது. உலக அளவில் பெண்களுக்கான வாக்குரிமை 200 ஆண்டுகளுக்கு முன்புதான் இருந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளிலேயே 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துதான் பெண்கள் வாக்களிக்கின்றனர்.

பெண்களுக்கான வாக்குரிமை சாதாரணமான விஷயம் அல்ல. குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல், செருப்பு அணிவதில் இருந்து மாற்றம் என பெண்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மாற்றம் யாரில் இருந்து தொடக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது. இவற்றை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

TN Election 2026 Actor Vijay sethupathi director ameer cast vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments