10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இராணுவ ஆயுத தொழிற்சாலையில் பணி
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கான்பூரில் செயல்பட்டுவரும் இராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கான்பூரில் செயல்பட்டுவரும் இராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Labourer (Semi-skilled)
மொத்த காலியிடங்கள்: 100
Advertisement
Advertisement
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,800
பணியிடம்: Ordnance Factory, Kanpur - 208009(UP)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை General Manager, Ordnance Factory, Kanpur-208009 என்ற பெயரில் Kanpur கிளையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட இந்தியன் போஸ்டல் ஆர்டர் அல்லது நாட்டுமையாக்கப்பட்ட வங்கியின் கீழ் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம் சென்று சேர கடைசி தேதி: 30.08.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.