டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு... பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டிஸ்
சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: Graduate Apprentice
காலியிடங்கள்: 63
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கலம் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.11,110 வழங்கப்படும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!
பயிற்சியின் பெயர்: Technician Apprentice
காலியிடங்கள்: 10
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக், டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 10.11.2021 தேதிக்கு முன் பதிவு செய்த பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் www.boal-srp.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2021