ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை! பிரேமலதா விஜயகாந்த்
ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது பற்றி...
ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை என்று தேமுதிகவின் பொதுச்செயலரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை (ஜூன் 18) பேசியுள்ளார்.
கடந்த மே 10 ஆம் தேதி முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, மே 13 ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் தொடங்கியது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து தொடக்கத்திலும், அதனைத் தொடர்ந்து தேசியகீதமும் இசைக்கப்பட்டது. ஆளுநர் உரைக்கு பின்னரும் இரண்டாவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.
இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்றைய ஆளுநரின் உரை ஆளுங்கட்சி தரப்புக்கு ஆதரவாக இருந்தது. தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை நாம் வரவேற்போம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை” என்று தெரிவித்தார்.