முகப்பு
வேலைவாய்ப்பு

அரசு வழக்குரைஞா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 நவம்பர் 2021, 5:47 am IST
பகிர்:

சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு சிறப்பு வழக்குரைஞா் பணியிடத்தும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கூடுதல் அரசு வழக்குரைஞா் பணியிடத்துக்கும் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கான விண்ணப்பங்களை www.chennai.nic.in  என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Advertisement

Advertisement

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட ஆட்சியா், சிங்காரவேலா் மாளிகை, எண். 62 ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் டிசம்பா் 13-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/11/2021112918.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments