முகப்பு
வேலைவாய்ப்பு

கல்லூரி, பல்கலை விரிவுரையாளர் பணி: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட உள்ள விரிவுராயாளர், இளநிலை உதவியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் போன்ற பணி...

Updated On : 2 ஜனவரி 2022, 11:17 am IST
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட உள்ள விரிவுராயாளர், இளநிலை உதவியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் போன்ற பணியிடங்களில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

தேர்வு: CSIR-UGC NET Exam-2021

தகுதி: ஏதாவதொரு அறிவியல் துறையில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக், பி.பார்ம், எம்பிபிஎஸ் போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். 

Advertisement

Advertisement

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள் குறைந்தது 50 சதவிகத மதிப்பெண்களுடன் தேவையான கல்வித் தகுதியை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.csirnet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடைபெறும் நாள்: 29.01.2022 - 06.02.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2022

மேலும் விவரங்கள் அறிய www.csirnet.nta.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments