தமிழக மருத்துவத் துறையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள தெரபிஸ்ட் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக...
தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள தெரபிஸ்ட் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.02/MRB/2026
மொத்த காலியிடங்கள்: 6
Advertisement
Advertisement
பணி: Therapeutic Assistant (Male)- 4
பணி: Therapeutic Assistant (Female) - 2
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 1.7.2026 தேதியின்படி 18 வயது முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில்லை. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் தெரபி பாடத்தில் குறைந்தது இரண்டரை ஆண்டு கால அளவினைக் கொண்ட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நர்சிங் தெரபி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, இதர அனைத்து பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications are invited only through online mode up to 11.02.2026 for direct recruitment to the posts of Therapeutic Assistant (Male) and Therapeutic Assistant (Female) in Tamil Nadu Medical Subordinate Service carrying the level of pay noted against.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.