பெரம்பூா் ரயில் நிலையத்தில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மீட்பு
பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது பற்றி...
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் இன்று காலை சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. நீண்ட நேரமாக சூட்கேஸை யாருக் எடுக்காத நிலையில், ரயில்வே காவல்துறையினர் அதனை ஆய்வு செய்தனர்.
அப்போது 35 வயதுமிக்க தலையில்லாத ஆண் சடலம் சூட்கேஸில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, ரயில் நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமிராக்களையும் ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
24 மணிநேரமும் பரபரப்பாக காணப்படும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Headless male corpse found in a suitcase at Perambur railway station!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.