பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்!
பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது பற்றி...
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் இன்று காலை சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. நீண்ட நேரமாக சூட்கேஸை யாருக் எடுக்காத நிலையில், ரயில்வே காவல்துறையினர் அதனை ஆய்வு செய்தனர்.
அப்போது 35 வயதுமிக்க தலையில்லாத ஆண் சடலம் சூட்கேஸில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, ரயில் நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமிராக்களையும் ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
24 மணிநேரமும் பரபரப்பாக காணப்படும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.