முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூரில் தலை இல்லாத ஆண் சடலம்: கணவரை மனைவியே கொன்றாரா?

பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் மனைவி கைது குறித்து...

Updated On : 7 ஜூன் 2026, 3:14 pm IST
பெரம்பூர் ரயில் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியே கொலை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை சூட்கேஸ் ஒன்று கிடந்தநிலையில், நீண்ட நேரமாக சூட்கேஸை யாருக் எடுக்காததால், ரயில்வே காவல்துறையினர் அதனை ஆய்வு செய்தனர்.

அப்போது சுமார் 35 வயதுடைய ஆணின் தலையில்லாத சடலம் சூட்கேஸில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, ரயில் நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ரயில்வே போலீஸார் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், கொல்லப்பட்டவரின் மனைவியே, தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் மனைவியையும், மனைவியின் ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டு, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

summary

Headless male body in Perambur: Did the wife kill her husband?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.