ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? - சிஏ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சென்னையிலுள்ள ரெப்கோ வங்கியில் மேலாளர் பணியிடங்கள் குறித்து...
இந்திய அரசின் நிறுவனமான ரெப்கோ வங்கியின் சென்னை கிளையில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து விபரம் வருமாறு:
பணி: Manager (Chartered Accountant)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.64,820 - 93,960
வயதுவரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: சிஏ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ்கள் சரிபார்த்தல், நேர்முகத் தேர்வுவில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. கட்டணத்தை டி.டி.யாக எடுத்து அனுப்பவும். டி.டி எடுக்க வேண்டிய முகவரி: "REPCO BANK RECRUITMENT CELL, CHENΝΑΙ".
விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாக கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Admin); Repco Bank Ltd, Post Box No: 1449, Repco Tower, No 33, North Usman Road, T. Nagar, Chennai - 600017.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.7.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Repco Bank a Government of India Enterprise invites applications for the following posts. The salary structure of employees of the bank is at par with IBA norms
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.