+2 படித்த பெண்களுக்கு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி குறித்து...
காஞ்சிபுரம்மாவட்டம், மகளிர்திட்டம், வட்டார இயக்க மேலாண்மை குழுக்களில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Community Bank Coordinator
காலியிடங்கள் : 39
Advertisement
Advertisement
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
அடிப்படை மதிப்பூதியம்: ரூ.2,500
தகுதி : +2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும், கணக்கிடும் திறன் உடையவராகவும் இருக்க வேண்டும். சுய உதவிக் குழு ஊக்குநராக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஊராட்சி அளவி லான கூட்டமைப்பைச் சார்ந்த -பெண் சுய உதவிக் குழு உறுப் பினராக இருத்தல் வேண்டும்.
ஆண்ட்ராய்டு கைபேசி வைத்திருப்பவர்களாகவும், அதை எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 3.6.2026