FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

+2 படித்த பெண்களுக்கு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி குறித்து...

Updated On : 3 ஜூன் 2026, 2:16 pm IST
கோப்புப் படம் - file photo
பகிர்:

காஞ்சிபுரம்மாவட்டம், மகளிர்திட்டம், வட்டார இயக்க மேலாண்மை குழுக்களில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Community Bank Coordinator

காலியிடங்கள் : 39

Advertisement

Advertisement

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

அடிப்படை மதிப்பூதியம்: ரூ.2,500

தகுதி : +2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும், கணக்கிடும் திறன் உடையவராகவும் இருக்க வேண்டும். சுய உதவிக் குழு ஊக்குநராக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஊராட்சி அளவி லான கூட்டமைப்பைச் சார்ந்த -பெண் சுய உதவிக் குழு உறுப் பினராக இருத்தல் வேண்டும்.

ஆண்ட்ராய்டு கைபேசி வைத்திருப்பவர்களாகவும், அதை எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 3.6.2026

summary

Community Bank Coordinator Position ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments