நர்சிங் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!
மத்திய அரசில் காலியாக உள்ள 124 நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசில் காலியாக உள்ள 124 நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை(மே 4)-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். Phase-XIV/2026/Selection Posts
பணி: Nursing Officer
Advertisement
பிரிவு: CGHS
காலியிடங்கள்: 107
வயது வரம்பு : 1.1.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: AIIPH
காலியிடங்கள்: 8
வயது வரம்பு : 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: CLTRI
காலியிடங்கள்: 9
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது சிஎன்எம் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். படிப்பை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் நர்சிங் பாடப்பிரிவு மற்றும் General English, General Awareness, General Intelligence, Quantitative Aptitude போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவின, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.5.2026