பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள 1055 மைனிங் சித்தார், துணை சர்வேயர், உதவி பேர்மேன் பணிகள் குறித்து..
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள 1055 மைனிங் சித்தார், துணை சர்வேயர், உதவி பேர்மேன் கீழ்க்கண்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு :
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: SECL/HR/MP/Recruitment/2026/166
Advertisement
பணி: Mining Sirdar T&S - Grade C
காலியிடங்கள் : 577
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் மைனிங் சித்தார்ஷிப் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Surveyor T&C - Grade C (Mining)
காலியிடங்கள்: 43
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங், மைன் சர்வேயிங் பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சியுடன் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Foreman (Electrical) - Grade C
காலியிடங்கள் : 435
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.47,330
வயது வரம்பு: 8.4.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அனைத்து விண்ணப்பதாரர்களும் தேவையான அசல் சான்றிதழ்களுடன் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய எரிவாயு சோதனைச் சான்றிதழ், முதலுதவி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,180. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: https://secl-cil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2026.
விண்ணப்பத்தாரரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.