முகப்பு
தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு தேர்வு! திருப்பூர் மாவட்டம் 96.28% தேர்ச்சியுடன் 11-வது இடம்!

10 ஆம் வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் 96.28% தேர்ச்சியுடன் 11-வது இடம் பெற்றுள்ளது.

மாணவிகள். - (கோப்புப்படம்)
பகிர்:

10 ஆம் வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் 96.28% தேர்ச்சியுடன் 11-வது இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிவகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தமாக 8.82 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தனர்.

Advertisement

Advertisement

திருப்பூர் மாவட்டத்தில் 345 பள்ளிகளை சேர்ந்த 14,100 மாணவர்கள் மற்றும் 14,913 மாணவிகள் என மொத்தம் 109 தேர்வு மையங்களில் 29,013 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.

இதில் 13,400 மாணவர்களும், 14,533 மாணவிகளும் என மொத்தம் 27,933 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.04 சதவிகிதமும், மாணவிகள் 97.45 சதவிகிதமும் என மொத்தம் 96.28 சதவிகித தேர்ச்சியுடன் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 11 வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 94.84 தேர்ச்சி சதவீதத்துடன் 17-வது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

In the 10th Grade examinations, Tiruppur district secured the 11th position with a pass percentage of 96.28%.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.