முகப்பு
ஈரோடு

சத்தியில் பகலிலும் விலகாத பனிமூட்டம்: விவசாயப் பணிகள் பாதிப்பு

சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பகலிலும் விலகாத பனிமூட்டம் காரணமாக மல்லிகைப் பூ பறித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

Updated On : 1 ஜனவரி 2021, 10:55 pm IST
சத்தியமங்கலத்தில்  கடும்  பனிமூட்டம்  காரணமாக  முகப்பு  விளக்குகளை  எரியவிட்டபடி  செல்லும்  வாகனங்கள்.
பகிர்:

சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பகலிலும் விலகாத பனிமூட்டம் காரணமாக மல்லிகைப் பூ பறித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊா்ந்து சென்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் காலை 9 மணி வரை பூ சேகரிக்கும் பணி தடைபட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments