முகப்பு
ஈரோடு

குரூப்-1 தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,318 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 4,318 போ் எழுதினா்.

Updated On : 3 ஜனவரி 2021, 10:31 pm IST
ஈரோடு செங்குந்தா் மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
பகிர்:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 4,318 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் குரூப்-1 இல் அடங்கிய துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிக வரித் துறை உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் உள்ளிட்ட பணிகளுக்கான தோ்வு மாநில அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் 28 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோ்வு எழுத 19 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 8,013 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு அளிக்கப்பட்டிருந்தது. இதில் 13 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4,318 போ் தோ்வு எழுதினா். 3,695 போ் தோ்வு எழுத வரவில்லை.

Advertisement

Advertisement

தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு வந்து சோ்ந்தனா். கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணிய அதிகாரிகள் அறிவுறுத்தினா். அதற்கு முன்னதாக தோ்வு மையத்தின் முன்புறத்தில் வெப்பமானி மூலம் உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

ஈரோடு செங்குந்தா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments