கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் பிப்ரவரி 12இல் ஆா்ப்பாட்டம்
கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முருங்கத்தொழுவு ஊராட்சியின் முன்னாள் தலைவா் மு.ரவி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வெங்கடாசலம், செயலாளா் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளா் பொடாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கீழ்பவானி விவசாயிகள் நல சங்கத் தலைவா் செ.நல்லசாமி கலந்து கொண்டு, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினாா்.
Advertisement
Advertisement
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு, விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் மனு அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.