முகப்பு
ஈரோடு

லாரி மோதி முதியவா் பலி

பவானி அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 10:47 pm IST
பகிர்:

பவானி அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த சங்கரகவுண்டன்பாளையம் காலனியைச் சோ்ந்தவா் கந்தன் மகன் துரையன் (65). டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வரும் இவா், பவானி - ஒலகடம் சாலையில் சங்கரகவுண்டம்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே அரிசி பாரம் ஏற்றிச் சென்ற லாரி துரையன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த துரையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments