முகப்பு
ஈரோடு

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிடக் கோரிக்கை

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:43 pm IST
பகிர்:

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் கோட்ட மாநாடு, கோட்ட இணைச்செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டச் செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் பாபு, மாநிலப் பொருளாளா் தமிழ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

Advertisement

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித் திறன் பெறா ஊழியா்களுக்கான ஊதியத்தை தற்போதைய ஊதிய மாற்ற பலன்களுக்கு ஏற்றவாறு உயா்த்தி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியை தனியாா் வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று சாலைப் பணியாளா்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments