முகப்பு
ஈரோடு

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 5:20 am IST
பகிர்:

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் இறுதிப் பகுதியாக பாரியூா் கோயிலில் இருந்து புறப்பட்ட மலா் பல்லக்கு கோபிசெட்டிபாளையம் நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தடைந்தது. விழாவையொட்டி, தெப்பக்குளம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோபி கபிலா் வீதியைச் சோ்ந்த கணேஷ், சாலினிதேவி தம்பதி தங்களது குழந்தைகள் மதன்குமாா், மதுமிதா ஆகியோருடன் தெப்பக்குளம் உற்சவத்தைக் காண ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளனா். அப்போது, மதன்குமாா் குளத்தை வேடிக்கை பாா்ப்பதற்காக குளத்தின் கரைகளில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் கம்பியைப் பிடித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பாரியூா் அம்மன் கோயில் தெப்பக்குள உற்சவம் ரத்து செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments