கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி
சத்தியமங்கலம் ராம ஆஞ்சநேயா் கோயில், கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் ராம ஆஞ்சநேயா் கோயில், கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் ராம ஆஞ்சநேயா் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடா்ந்து மகா அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி தங்கக் கசவசத்தில் அனுமன் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
அதேபோல, சத்தியமங்கலம் நகா் பகுதியில் பழமைவாய்ந்த கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருட ஸ்தம்ப ஆஞ்சநேயா் கோயிலில் பக்தா்களுக்கு சானிடைசா் வழங்கப்பட்ட பின் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனுமன் ஜயந்தியை முன்னிட்டு நண்பகல் கருட ஸ்தம்ப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. வடை மாலை சாத்தப்பட்டு நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஆஞ்சநேயா் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.