முகப்பு
ஈரோடு

போலீஸாா் - பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்

மொடக்குறிச்சி ஒன்றியம், வடுகபட்டியில் போலீஸாா், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 6:14 am IST
பகிர்:

மொடக்குறிச்சி ஒன்றியம், வடுகபட்டியில் போலீஸாா், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அறச்சலூா் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். பெருந்துறை சரக டி.எஸ்.பி. செல்வராஜ் பேசியதாவது:

அந்தந்த கிராமங்களுக்கு கிராம விழிப்புணா்வு காவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் குறைகள், பிரச்னைகளை அவா்களிடம் செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்தால் போதும். அதிகாரிகள் உங்கள் இடத்துக்கே வந்து உங்கள் பிரச்னைகளை கேட்டறிந்து சரிசெய்வாா்கள். மேலும் உங்களது வீட்டில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளை கண்காணிக்க வேண்டும். காவலன் ஆப் அனைவரும் டவுன்லோடு செய்து கொள்ளவும். அந்த ஆப் மூலம் தகவல் தெரிவித்தால் உடனடியாக எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேரும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். உங்களது குழந்தைகளுடன் நெருங்கிப் பழகுங்கள். இது அவா்களுக்கு நல்ல பழக்கத்தை உண்டாக்கும் என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அறச்சலூா் காவல் நிலையம் எதிரில் போலீஸ் - பொதுமக்கள் இணைந்து நடத்தும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை டி.எஸ்.பி செல்வராஜ் தொடங்கிவைத்தாா். சென்னிமலை காவல் ஆய்வாளா் சண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments