29.4.1976: தமிழ் நாட்டில் 6 லட்சம் பேருக்கு கு.க. ஆபரேஷன் செய்யத் திட்டம்
தமிழ் நாட்டில் 6 லட்சம் பேருக்கு கு.க. ஆபரேஷன் செய்யத் திட்டமிட்டிருப்பது பற்றி...
திருச்சி, ஏப். 28 - தமிழ் நாட்டில் நடப்பு ஆண்டில் முந்தைய ஆண்டை (1975-76) விட 2 மடங்கு அதாவது 6 லட்சம் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்கள் செய்யக் குறியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் புது டில்லியில் நடந்த சுகாதார, குடும்பக் கட்டுப்பாடு திட்ட கூட்ட கவுன்சிலில் 1976-77 குறியிலக்கு 1975-76ன் குறியிலக்கைவிட 2 மடங்காக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
தமிழ் நாட்டில் 40,000 பெண்களுக்கு கருத்தடை 'லூப்'களும் பொருத்தப்படும்.
Advertisement
Advertisement
1973-74-ல் தமிழ் நாட்டில் 1,10,015 பேருக்கு கருத்தடை ஆபரேஷன்கள் செய்யப்பட்டது. 1975-76-ல் இது 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றுமதிப்பிடப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ. 60 வழங்கப்படும்.
கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைக்கு லோக் சபையில் எதிர்ப்பு
புது டில்லி, ஏப். 28 - ஜனத்தொகை பற்றிய தேசீயக் கொள்கைக்கு லோக்சபையில் இன்று பொதுவாக ஆதரவு கிடைத்தது. சுகாதார, குடும்பக் கட்டுப்பாடு திட்ட இலாகா மானியக் கோரிக்கை மீது பேசிய பல உறுப்பினர்கள், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கையை வரவேற்றனர்.
ஆனால் இன்று பேசியவர்களில் பெரும்பாலோர் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் கட்டாயப்படுத்தும் அம்சம் இருக்கக் கூடாது என்றனர்.
நயமான முறைகளை கையாள்வதே சிலாக்கியம் என்றார்கள்.
குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம், அதற்கான முறைகள் பற்றி மக்களுக்கு சரிவர எடுத்துரைத்தால்தான், இந்தத் திட்டம் வெற்றியடையும் என்றார்கள். ...
Plan to perform family planning operations on 600,000 people in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.