உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடித்து வந்தால் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது.
- புங்க எண்ணெய் (100 மில்லி) ,
பரங்கி பட்டை சூரணம் ( 50கிராம்) ஆகியவற்றைச் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை சொரியாசிஸ் உள்ளவர்கள் பூசி வந்தால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். - புங்க இலை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வடிகட்டி துணியில் எடுத்து தலையில் பொடுகினால் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி 10 நிமிடம் கழித்து குளிந்து வந்தால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனடியாக சரியாகும்.
- புங்க எண்ணெய் (250 மில்லி) , எலுமிச்சை சாறு (100 மில்லி) இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் மூட்டு வலி , கீல் வாதம் , வீக்கம் ஆகியவை சரியாகும்.
- புங்க விதை பொடி(அரை ஸ்பூன்) அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com