முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை எருக்கம்

எருக்கம் பாலில், வெள்ளை எள்ளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி

Updated On : 2 ஜூன் 2017, 10:45 am IST
பகிர்:

எருக்கம் இலையை நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த எண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்துக்கோண்டால் மூட்டு வலி, மூட்டு வாதம், இடுப்பு வலி போன்றவை குணமாகும்.

எருக்கம் இலையை நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த எண்ணெய்யை பக்கவாதம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து தேய்த்துவந்தால் விரைவில் குணம் பெறலாம்.

எருக்கம் பாலை, வழுக்கை, குஷ்டம், சொரி, சிரங்குகள் மீது பூசி வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.

Advertisement

Advertisement

எருக்கம் வேரை, நல்லெண்ணெய்யில் போட்டுக்  கொதிக்க வைத்து பூசினால் தொழுநோய் குணமாகும்.

எருக்கம் மொட்டை எடுத்துக் கசக்கிச் சாறு எடுத்து இரண்டு மூன்று சொட்டுகளைக் காதில் விட்டால் காது வலி குணமாகும்.

எருக்கம் பாலில், வெள்ளை எள்ளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.