காலையில் எழுந்தவுடன் உடல் தள்ளாட்டம், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படுகிறதா?
நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும், அவசரப்படும் பொழுதும்
அறிகுறிகள் : நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும், அவசரப்படும் பொழுதும் உண்டாகும் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் சமச்சீரற்ற நிலையினால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து காலையில் எழுந்தவுடன் உண்டாகும் தள்ளாட்டம், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் நீங்க
மண்டலம் - நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
காய் - எலுமிச்சம் பழம்
Advertisement
Advertisement
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - தை
குணம் - பொறுமை
ராசி /லக்கினம் - மகரம்
சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்ளோவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.
தீர்வு : எலுமிச்சம் பழத் தோலுடன் (1), கொத்தவரங்காய் (4), புதினா (சிறிதளவு), வெற்றிலை (4) , இஞ்சி (1 துண்டு) இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் காலையில் எழுந்தவுடன் உண்டாகும் தள்ளாட்டம், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் குணமாகும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளவும்
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.