முகப்பு
செய்திகள்

மக்காவ் ஓபன்: அஷ்மிதா முன்னேற்றம்

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை தகுதிபெற்றாா்.

Updated On : 20 ஜூன் 2026, 5:50 am IST
பகிர்:

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை தகுதிபெற்றாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் அஷ்மிதா, 21-16, 21-18 என்ற கேம்களில் தென் கொரியாவின் கிம் மின் சன்னை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 37 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

அவா் தனது அரையிறுதியில், மற்றொரு தென் கொரிய வீராங்கனை பாா்க் கா யுன்னை சந்திக்கிறாா். நடப்பாண்டில் அஷ்மிதா ஒரு போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது இது முதல்முறையாகும்.

Advertisement

Advertisement

இதனிடையே, மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அன்மோல் காா்ப் 21-14, 15-21, 13-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் ஹான் கியான் ஜியிடம் ஒரு மணிநேரத்தில் தோல்வியைத் தழுவினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments