முகப்பு
இந்தியா

இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு பாரபட்சமா? நாராயணசாமி

இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு பாரபட்சமாக நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி

Updated On : 2 ஏப்ரல் 2013, 4:22 am IST
பகிர்:

இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு பாரபட்சமாக நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்

சென்னையில் இருந்து திங்கள்கிழமை காலை விமானம் மூலம் தில்லி சென்ற அவர்  விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு பாரபட்சமாக நடக்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் மீனவர் பிரச்சனை குறித்து இலங்கை அரசிடம் பேசியுள்ளார். மேலும் இந்தப் பிரச்சனை குறித்து இருநாட்டு மீனவர்களையும் அழைத்துப் பேசி சமரச தீர்வு காண வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம். ஆனால் இதுவரை பதில் இல்லை.

Advertisement

Advertisement

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது. சில தீய சக்திகள் பொய்ப் பிரசாரத்தை பரப்பி வருகின்றன.

இலங்கைத் தூதர் கரியவாஸம் அவருடையே வேலையை செய்யாமல், சிங்களவர்கள் இந்திய வடமாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற தவறாக பிரச்சாரம் செய்து வருவதை இனியும் அனுமதிக்க முடியாது. அதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.