முகப்பு
இந்தியா

ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவராக குரியன் தேர்வு

மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (ஏஎஃப்பிபிசி) தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒருமனதாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 12:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (ஏஎஃப்பிபிசி) தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒருமனதாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

பாங்காங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஎஃப்பிபிசி-ன் 73ஆவது செயற்குழுக் கூட்டத்தில் குரியன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, ஏஎஃப்பிபிசி-ன் தலைவராக ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாஸýவோ ஃபுகுடா உள்ளார். அவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக குரியன் பதவியேற்பார்.

Advertisement

பிராந்திய நாடுகளின் அரசுசாரா அமைப்பான ஏஎஃப்பிபிசி 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு உள்ளது. இந்தக் குழு, பிராந்திய நாடுகளின் பல்வேறு பிரச்னைகள், வளர்ச்சி உள்ளிட்டன குறித்து கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏஎஃப்பிபிசி-ன் செயல்பாடுகளுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்துக்கு தலைவராக குரியன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.