முகப்பு
இந்தியா

தெற்கு சூடானில் கொல்லப்பட்ட5 இந்திய வீரர்கள் சடலங்கள் தில்லி கொண்டு வரப்பட்டன

தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர் தாக்கியதில் இறந்த 5 இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லிக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

Updated On : 12 ஏப்ரல் 2013, 12:41 am IST
பகிர்:

தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர் தாக்கியதில் இறந்த 5 இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லிக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

ஐ.நா. அமைதிப்படையின் ஒரு பகுதியாக தெற்கு சூடானில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜோங்லி பகுதியில் ரோந்து சென்ற இந்திய வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென தாக்குதல் மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

இதில் லெப்டினன்ட் கர்னல் மகிபால் சிங், வீரர்கள் சிவ்குமார் பால், ஹீராலால், பரத் சிங், நந்த் கிஷோர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே ஐ.நா. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லி கொண்டு வரப்பட்டன.

ராணுவ மரியாதையோடு அவர்களின் சடலங்களுக்கு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

வீரர்களின் சடலங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.