காங்கிரஸில் இணைகிறார் ஜெயபிரதா?
மக்களவை உறுப்பினரான ஜெயபிரதா காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை உறுப்பினரான ஜெயபிரதா காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர், உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த மாநிலமான ஆந்திரத்துக்கு திரும்பி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய ஜெயப்பிரதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடந்த வாரம் இவர் சந்தித்தார். இதைத் தொடர்ந்தே ஜெயபிரதா காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.
Advertisement
"நான் மீண்டும் ஆந்திரத்துக்குத் திரும்ப உள்ளேன். எந்தக் கட்சியில் இணைவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்' என்று சமீப காலமாக ஜெயபிரதா கூறி வருகிறார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தார். ஜெயபிரதாவின் இந்த அறிவிப்பை, ராஜமுந்திரி தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.அருண்குமார் வரவேற்றுள்ளார்.
திரைப்பட நடிகையான ஜெயப்பிரதா 1990-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். மாநிலங்களவை எம்.பி.யாக 1996-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி, 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன், சமாஜவாதிக் கட்சியில் இணைந்தார்.
உத்தரப் பிரதேசம், ராம்பூர் தொகுதியிலிருந்து இரு முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். சமாஜவாதிக் கட்சியிலிருந்து அமர் சிங் வெளியேறியபோது, ஜெயபிரதாவும் வெளியேறினார்.