போலீஸ் காவலில் அஸ்வின் அகர்வால்
தில்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர் அஸ்வின் அகர்வாலை, மும்பை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
தில்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர் அஸ்வின் அகர்வாலை, மும்பை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
கிரிக்கெட் வீரர் அஜீத் சாண்டிலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக தில்லி போலீஸாரால் அகர்வால் கைது செய்யப்பட்டார். அகர்வாலை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மும்பை போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை ஏற்ற நீதிபதி ஏ.ஏ.கான், அக்ரவாலை வரும் 6-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
Advertisement
Advertisement
அதேசமயம், புணேயைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களான தினேஷ் சர்மா மற்றும் கிஷோர் பப்லானியின் போலீஸ் காவலையும் வரும் 6-ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.