முகப்பு
இந்தியா

காங்கோ கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த மாணவர்களை மீட்க இந்திய வீரர்கள் உதவி

இந்திய வீரர்கள் உதவியுடன், காங்கோ கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த 12 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On : 12 ஜூன் 2013, 2:06 am IST
பகிர்:

இந்திய வீரர்கள் உதவியுடன், காங்கோ கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த 12 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

காங்கோ குடியரசு நாட்டில் அமைதிப் பணியில் ஈடுபடுவதற்காக ஐ.நா. அமைதிப்படையின் கீழ் இந்திய வீரர்களின் படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வடக்கு கிவூ மாகாணத்தில் கிவாஞ்சா பகுதியில் 12 அப்பாவி மாணவர்களை கிளர்ச்சியாளர்கள் பிடித்துச் சென்று

விட்டனர்.

Advertisement

Advertisement

மாணவர்களுக்கு கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளதாக கருதி கடந்த 5-ம் தேதி அவர்களை கிளர்ச்சியாளர்கள் பிடித்துச் சென்றனர். இந்நிலையில் அவர்களை மீட்க வலியுறுத்தி உள்ளூர் தலைவர்கள், தொண்டு நிறுவனத்தினர் இந்திய படைப்பிரிவிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாணவர்களை மீட்பதற்காக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக உள்ளூர் பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மூலம் மாணவர்களை விடுவிக்க வேண்டும் என கிளர்ச்சியாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 2 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் தொடர் முயற்சியின் காரணமாக மீதமிருந்த 10 மாணவர்களையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர். இந்திய படை வீரர்களின் இம்முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.