முகப்பு
இந்தியா

சீனாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 6 பேர் சாவு

சீனாவின் ஜியாங்ஸý மாகாணத்தில் வெடி விபத்து காரணமாக மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

Updated On : 12 ஜூன், 2013 at 1:00 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

சீனாவின் ஜியாங்ஸý மாகாணத்தில் வெடி விபத்து காரணமாக மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

ஜியாங்ஸý மாகாணம், சுஸவ் நகரில் உள்ள மூன்று மாடி கட்டடம் செவ்வாய்க்கிழமை திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கு, எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தே காரணம் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.