சீனாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 6 பேர் சாவு
சீனாவின் ஜியாங்ஸý மாகாணத்தில் வெடி விபத்து காரணமாக மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
சீனாவின் ஜியாங்ஸý மாகாணத்தில் வெடி விபத்து காரணமாக மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
ஜியாங்ஸý மாகாணம், சுஸவ் நகரில் உள்ள மூன்று மாடி கட்டடம் செவ்வாய்க்கிழமை திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கு, எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தே காரணம் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.