பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ்காரர் சாவு
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும்
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.
டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மத்திய பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் வீட்டை சுற்றி வளைத்த போது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு போலீஸ்காரரும், மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement