உத்தரகண்டில் மீண்டும் மழை: 7 பேர் சாவு
உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர்.
சமோலி மாவட்டத்தில் திகெüனா கிராமத்தில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். பலத்த மழையினால் மலைப்பகுதியில் இருந்த பாறைகள் உருண்டு வீட்டின் மீது விழுந்ததாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள், 3 பெண்கள் அடங்குவர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவரின் உடல்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
Advertisement
மற்றொரு சம்பவம்: கார்வால் பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.